குழந்தைகளின் எடை அதிகரிக்கவும், வெப்பநிலை சீராக கிடைக்கவும், கங்காரு பராமரிப்பு சிகிச்சை முறை மூலம் குழந்தைகளை தாயின் நெஞ்சுப் பகுதியோடு அணைத்து பராமரித்தனர். இதன் மூலம் தாயின் வெப்பநிலை குழந்தைகளுக்கு சீராக கிடைத்தது. தற்போது 3 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக உள்ளனர். குழந்தைகளின் எடையை அதிகரிக்க மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கினர். மூன்று குழந்தைகளையும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர்.
The post ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கங்காரு சிகிச்சை முறையில் பராமரிப்பு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அசத்தல் appeared first on Dinakaran.