சென்டர் மீடியனில் பூச்செடி நடும் பணி

 

அரூர், நவ.21: தர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி வழியாக திருவண்ணாமலைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, சாலை பணிகள் ஒரு சில இடங்களில் முடிந்துள்ளது.

சாலை பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சென்டர் மீடியனில் பூச்செடிகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் வரை சாலை பணிகள் முடிவடைந்துள்ளதால், சென்டர் மீடியனில் அப்பகுதியில் பூச்செடிகள் நடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்டர் மீடியனில் பூச்செடி நடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: