நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 1000 டன் நெல் சிவகங்கைக்கு அனுப்பி வைப்பு

 

நீடாமங்கலம், நவ.18: நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 1000 டன் நெல் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் விவசாயிகள் சம்பா, குறுவை சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர். சாகுபடி செய்த நெல் மணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.விற்பனை செய்த நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து அருகில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்கள், நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி ஆகிய இடங்களில் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கப்படுகிறது.

அங்கிருந்து லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து ரயில் வேகன்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல தனியார் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரசு நவீன அரிசி ஆலை சுந்தரக் நோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனியிலிருந்து அரவை செய்த அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது வினியாக திட்டத்திற்கு அனுப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்து இயந்திர அறுவடை செய்த நெல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த பொது ரக நெல் 1000 டன் 78 லாரிகளில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து 21 வேகன் (ரயில் பெட்டி)களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு சிவகங்கை அனுப்பி வைத்தனர்.

The post நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 1000 டன் நெல் சிவகங்கைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: