இத்தகைய சிறப்புமிக்க பிரம்ம கமலம் பூச்செடியை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த நீலா என்பவர் தனது வீட்டில் பராமரித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றபோது அங்கிருந்து பிரம்ம கமலம் பூ செடியை வாங்கி வந்து வளர்க்க தொடங்கினார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, நேற்று நள்ளிரவு பூத்தது. இதனை அந்த குடும்பத்தினர் பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் அந்த பூவை பலர் ஆச்சரியத்துடன் பார்க்க திரண்டனர்.
The post ஜோலார்பேட்டை அருகே நள்ளிரவு பூத்துகுலுங்கிய பிரம்ம கமலம் பூ appeared first on Dinakaran.