முன்னதாக நேற்று டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களில் இது இரண்டாவது நிலநடுக்கம் ஆகும். கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்றாவது நிலநடுக்கம் ஆகும். கடந்த 4ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 128 பேர் இறந்தனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் பீதியில் உள்ளனர். இமயமலைப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படப் போவதாக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நேபாளத்தை தொடர்ந்து வங்கக் கடலில் நிலநடுக்கம்: தொடர்ந்து நடப்பதால் மக்கள் பீதி appeared first on Dinakaran.
