எட்டயபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

எட்டயபுரம்,நவ.7: எட்டயபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் மல்லிகா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். தேர்தல் துணை தாசில்தார் சண்முகவேல், ஆர்ஐ கோமதி, விஏஓ ராமநாதன், கிராம உதவியாளர் மாரியப்பன், ஆசிரியர்கள் பழனிகுமார், அயூப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எட்டயபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: