எட்டயபுரத்தில் சதுரங்க போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்

எட்டயபுரம்,நவ.7: எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் எட்டயபுரம் தாலுகா சதுரங்க சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் தாலுகா சதுரங்க சங்க நிர்வாகிகள் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத்தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பேரூர் துணைச்செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எட்டயபுரத்தில் சதுரங்க போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: