விசாரணையில், பூஜா உயிரிழப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், அம்மா ஐ மிஸ் யூ, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. நீங்கள் குப்பை பொறுக்கி என்னை படிக்க வைக்கிறீர்கள். ஆனால் பிளஸ் 2 வகுப்பில் நான் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. உங்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.