நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்ந்து, 530 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களாக 525 காசாக இருந்து வந்தது. இந்நிலையில் முட்டை விலையில், என்இசிசி நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 530 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி முட்டை விற்பனை அதிகரித்து வருவதால், முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
The post முட்டை விலை 530 காசானது appeared first on Dinakaran.