இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைத்து சமூகத்தினரும் உணவகங்கள் நடத்துவதற்கு பெரியார்தான் காரணம் என கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் ஓட்டல் உரிமையாளர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து தெரிவித்ததற்காக அந்த உணவகம் மற்றும் இனிப்பகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பாஜ மற்றும் அதன் சார்பு சமூக ஊடகத்தினர், குலத்தொழிலை ஆதரிக்கும் விதமாக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே பாஜ சார்பு சமூக ஊடகத்தினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 

The post இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: