சோழவந்தான் அருகே ஊராட்சி துணை தலைவரின் கடையில் ரூ.9 லட்சம் திருட்டு: மாயமான பெண்ணுக்கு வலை

 

சோழவந்தான், அக். 21: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வி (46). இவ்வூர் ஊராட்சி துணைத் தலைவராக இருக்கும் இவர், மதுரை சாலையில் ஜெராக்ஸ் கடையுடன் கூடிய பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். இவரது கடைக்கு சில நாட்களாக பெயர் விபரம் தெரியாத சுமார் 40 வயதுள்ள பெண் வந்து பொருட்கள் வாங்கி சென்றுள்ளார்.

அடிக்கடி வந்து நட்புடன் பேசிச் சென்ற மர்ம பெண் பணம் வைக்கும் இடத்தை நோட்டமிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நகை அடகு வைத்த பணம் உள்ளிட்ட ரூ.9 லட்சத்தை பையுடன் கடையில் செல்வி வைத்திருந்துள்ளார்.அப்போது கடைக்கு வந்த மர்ம பெண் பொருட்கள் வாங்குவது போல் செல்வியை திசை திருப்பி, ரூ.9 லட்சம் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு தப்பினார.

சிறிது நேரம் கழித்து கைப்பை இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி, இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர்.

The post சோழவந்தான் அருகே ஊராட்சி துணை தலைவரின் கடையில் ரூ.9 லட்சம் திருட்டு: மாயமான பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: