என்எஸ்எஸ் திட்ட பயிற்சி முகாம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட பயிற்சி முகாம் நடந்தது. உதவி பேராசிரியர் மாரியம்மாள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பழனி தலைமை வகித்தார். ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங் துவக்கி வைத்து பேசினார். முதலாம் ஆண்டு என்எஸ்எஸ் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. என்எஸ்எஸ் அலுவலர் பாலசுந்தர் நன்றி கூறினார்.

The post என்எஸ்எஸ் திட்ட பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: