சபரிமலைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் செல்லக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. மண்டல கால பூஜைகள் தொடங்கினால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சபரிமலை நோக்கி படையெடுப்பார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், வேன்கள் உள்பட வாகனங்களில் சபரிமலைக்கு வருகின்றனர். சில பக்தர்கள் தங்களது வாகனங்களில் தோரணங்கள், மின்விளக்குகள் போன்ற அலங்காரங்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும் இந்த தடையை மீறி பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வருவதாக கேரள உயர்நீதிமன்றத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வருவதைத் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சபரிமலைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் செல்லக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: