ரவுண்ட் டேபிள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏரியா-2ன் ஏரியா சேர்மன் சுஜய் சுதர்ஷன் மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிர்வாக இயக்குநர் கார்த்திக் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு தரப்பினரின் கூட்டு முயற்சியில் திறன் மேம்பாடு துறையில் வேலைவாய்பு வழங்க வழிவகை செய்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதார துறையில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உகந்த சூழலை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டு முயற்சியின் விதிமுறைகளின் கீழ், டிஎன்எஸ்டிசிஎச் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகியவை ரவுண்ட் டேபிளின் மதிப்பிற்குரிய ‘எப்டிஇ’ பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான தொழில் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகளை வழங்குவதில் இணைந்து கொள்ள உறுதியளித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாணவர்களுக்கு ஹெல்த்கேர் துறையில் விரிவான பயிற்சி வழங்க ரவுண்ட் டேபிள் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.