திருத்துறைப்பூண்டி: பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிருக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுக்கூட்டம் நகரத் தலைவர் வக்கீல் சிவசாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிருக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் appeared first on Dinakaran.
