பெரியகுளம் வரதராஜ பெருமாள் ேகாயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் ேகாயிலில் சுவாமி பெருமாள்-திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியகுளத்தில் வராக நதியின் தென்கரையில் வரதராஜ பெருமாள் ேகாயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சுவாமிக்கு விசேஷ அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். புரட்டாசி 4வது வார பெருவிழா முன்னிட்டு மூலவர் பெருமாள் திருப்பதி அலங்காரம், உற்சவர் பெருமாள் கருட சேவை அலங்காரம், தாயார்- திருப்பதி பத்மாவதி தாயார் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கால சந்தி பூஜை, நட்சத்திர தீபம் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியை முன்னிட்டு காப்புக்கட்டுதல் வைபவமும் நடைபெற்றது. தேனி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசன ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post பெரியகுளம் வரதராஜ பெருமாள் ேகாயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: