சாமியார்மடம் அருகே இரண்டு நாட்களாக நிற்கும் மர்மவேன்

சாமியார்மடம், அக்.13: சாமியார்மடம் அருகே கஞ்சிமடம் தர்ம சாஸ்தா கோயிலுக்கு செல்லும் வழியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஆம்னி வேன் கதவு கண்ணாடிகள் மூடப்பட்ட நிலையில் நிற்கிறது. இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் நம்பர் பிளேட் இல்லை. வேனில் ஏதேனும் மர்ம பொருட்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இரண்டு நாட்களாக இந்த வேன் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாதது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சாமியார்மடம் அருகே இரண்டு நாட்களாக நிற்கும் மர்மவேன் appeared first on Dinakaran.

Related Stories: