புரட்டாசி பெருவிழா வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா

வேதாரண்யம், அக்.8: நாட்டுமட மாரியம்மன் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் பரிவார தேவதைகளுடன் கோயிலை சுற்றி வீதி உலா காட்சி நடைபெற்றது.

The post புரட்டாசி பெருவிழா வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா appeared first on Dinakaran.

Related Stories: