கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய ஷாப்ட் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. தொடர்ந்து இதர பழுதான இயந்திர பாகங்கள் மாற்றப்பட்டு, ரோப்காரில் கடந்த 2 நாட்களாக பஞ்சாமிர்த டின்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்தது. நேற்று ரோப்கார் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வறிக்கையை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனடிப்படையில் இன்று முதல் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post பராமரிப்பு பணி முடிந்தது பழநியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடங்கும் appeared first on Dinakaran.