மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குவோர் கவுரவிப்பு

மதுரை, அக். 7: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை கிளை சார்பில், தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்யும் நிறுவனங்களை கவுரவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ரத்த வங்கியின் தலைவரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவத் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாகி டாக்டர் பி. கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். குன்றக்குடி அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை துவக்கி வைத்து பேசினார். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முன்னாள் துணைத் தலைவர் விஎம்.ஜோஸ், லயன் மாவட்ட கவர்னர் ராதா கிருஷ்ணன்,

ஐஎம்ஏ மதுரை மீனாட்சி கிளை தலைவர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், கிளை செயலாளர் டாக்டர் எம்.கார்த்திகேயன், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் ரத்த புற்றுநோய் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் டி.காசி விஸ்வநாதன், மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், மீனாட்சி மிஷன் மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் அழகுமுனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கியின் முதுநிலை மேலாளர் எஸ்.ரவி நன்றி கூறினார்.

The post மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்ததானம் வழங்குவோர் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: