×

புதுக்கோட்டையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்கம்

புதுக்கோட்டை,செப்.29: புதுக்கோட்டயில் புதிய பஸ் நிலையம் பழுதடைந்துள்ளதால், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்து நிலையில் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் மேற்கூரையில் இருந்து அவ்வப்போது சிமென்ட் பூச்சி பெயர்ந்து விழுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இடிக்கும் பணிகளை நகராட்சி நிர்வகத்தினர் தற்காலிகமாக மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள எழில்நகர், ஆலங்குளம் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெங்கலப்பிடாரி அம்மன் கோயிலுக்கு பின்புறம் ஆலங்குளம் பகுதியில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் தற்காலிகப் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இதில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, ஆணையர் ஷியாமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...