விலைவாசி உயர்வு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி, செப். 29: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியான ஆர்எஸ்பி சார்பில், தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜதுரை முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும், ஏழைகள் மீது வரிச்சுமை ஏற்றியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை காட்டும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், முருகானந்தம், நாகேந்திரன், மாடசாமி, ஜெயசிங், ராஜபாண்டி, சுருளிமுத்து, அருண்குமார், ஆனந்தன், விமல்ராஜ், பரசுராமன், மணி, செல்வம், சார்லஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post விலைவாசி உயர்வு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: