சென்னை ஆவடி ராஜ்பாய் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன் (58), இன்ஜினியர். இவரது மனைவி நந்தினி (47). நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில், நந்தினி வீட்டில் தனியாக இருந்தபோது, முன்பக்க கேட் வழியாக 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைய முயன்றது. அப்போது, வீட்டில் இருந்த சிப்பி பாறை மற்றும் பாக்சர் ரக நாய்கள், வீட்டின் உரிமையாளரை காப்பாற்றவும், அவர்களை உஷார் படுத்தவும் முதலில் குரைத்தது. நாய் எதற்கு சத்தம் போடுகிறது என்று வீட்டு உரிமையாளர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இந்நிலையில், வீட்டிற்குள் பாம்பு நுழையாமல் வளர்ப்பு நாய்கள் குரைத்தும், வாயால் கவ்வி சென்று வெளியே விடவுடம் முயன்றன.
ஆனால், நாயின் சத்தத்தை கேட்டு பாம்பு படம் எடுத்து சீறியதுடன், அவற்றை கொத்தவும் செய்தது. பல நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையினால் பாம்பால் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதில், ஒரு கட்டத்தில் பாக்சர் ரக நாயை பாம்பு தீண்டியது. எனினும் தன் இறுதி மூச்சு இருக்கும் வரை பாக்சர் ரக நாய் போராடியது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் நந்தினி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் சமூக ஆர்வலர் ரீகன் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர், சிப்பி பாறை நாயை காப்பாற்றி, நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு, வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வெங்கல் வனப்பகுதியில் விட்டார். பாம்பிடம் சண்டையிட்ட பாக்சர் ரக நாய், பாம்பு சீண்டியதில் ஒரு மணி நேரத்தில் உடலில் விஷம் பரவி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் அருகே சென்று படுத்துக்கொண்ட ‘சிப்பி பாறை’ நாய், நண்பனை இழந்த துயரம் தாங்காமல் கண்ணீர் வடித்தது காண்போர் நெஞ்சை உருக செய்தது. மேலும், நன்றி உணர்வுக்கு சான்றாக அமைந்த பாக்சர் நாயின் செயலை கண்டு அக்கம்பக்கத்தினர் வியந்தனர்.
The post எஜமானியை காப்பாற்ற முயன்றபோது பாம்பு கடித்து நாய் பரிதாப பலி: நண்பரை இழந்த மற்றொரு நாய் கண்ணீர் appeared first on Dinakaran.
