பழவேற்காடு அருகே பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகே போலாட்சி அம்மன் குளம் உள்ளது. இங்கு, தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. இந்நிலையத்திற்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், பழைய சுற்றுசுவரை இடிக்கும் பணி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில், இடித்த சுற்றுசுவர் கட்டிட கழிவுகளை நீரேற்று நிலைய பள்ளத்தில் கொட்டாமல், விற்பனை செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழவேற்காடு அருகே பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: