இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகவும் தமிழகம் ஆந்திரா வனப்பகுதிகளில் பெய்யும் கனமழையாலும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடியில் உள்ள பாலாற்றில் இருகரைகளை தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post ஒரு வாரமாக பெய்த மழையால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம்: திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம்,அம்பலூர் கிராமமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.