உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடு, வீதியுலா

 

ஜெயங்கொண்டம், செப்.23: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் இரவு வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வீதி உலா முன்னிட்டு மாவுப்பொடி மற்றும் திரவிய பொடி பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டது.

பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வெள்ளைப் பிள்ளையார் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில், உடையார்பாளையம், பரணம், பெருமாள் இடையார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடு, வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: