50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். பின்னர் சிவாச்சாரியார் ஒருவர், அங்குச தேவருடன் குளத்தில் மூன்று முறை மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா நடந்தது. பகல் 1.30 மணியளவில் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி கோலாகலம்: மூலவருக்கு 18 படி மெகா சைஸ் கொழுக்கட்டை படையல் appeared first on Dinakaran.