மதுரை, செப்.20: அண்ணாவை பற்றி இழிபிறவிகள் இழிவாக பேசுகின்றனர் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அண்ணாவை பற்றி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்தால், பாஜ-அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சி இடையே இருந்த கூட்டணியும் முறிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக, பாஜ இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை விளாங்குடியில் நேற்று இரவு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கி பேசியதாவது: ‘‘தற்போது பெரியார்,அண்ணாவை பற்றி இழி பிறவிகள் இழிவாக பேசுகின்றனர். தொட்டால் தீட்டு நடந்தால் தீட்டு என்றிருந்த காலத்தில் அவர்கள் போராடினார்கள்’’என்றார்.
The post அண்ணாவை இழிபிறவிகள் இழிவாக ேபசுகின்றனர் மதுரையில் செல்லூர் ராஜு பேச்சு appeared first on Dinakaran.