கொடைக்கானலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

 

கொடைக்கானல், செப். 12: கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் இன்று (செப். 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கொடைக்கானல் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கொடைக்கானல், அட்டுவம்பட்டி பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பழம்புத்தூர், கவுஞ்சி, கிளாவரை, வடகவுஞ்சி, பெரும்பள்ளம், மேல் பள்ளம், சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, பி.எல் செட், சாமகாட்டு பள்ளம், சவரிக்காடு, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள் பட்டி, கடைசிக்காடு, பெரியூர், பாச்சலூர், கே.சி பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

The post கொடைக்கானலில் இன்று மின்சாரம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: