இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நடைபாதையின் தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து காரில் சிக்கிய ரஞ்சித் உள்பட 2 பேரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர்கள் உயிர்தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சித் உள்பட 2 பேரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ராஜாஜி சாலையில் பரபரப்பு டயர் வெடித்து கார் கவிழ்ந்தது: இரண்டு பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.
