இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், பசுமை பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் நாராயணன், ஸ்ரீராம், செந்தில், வழக்கறிஞர் லோகேந்திரன், மகாலட்சுமி, உமா மற்றும் தேவி ஆகியோர் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாடுகளை அத்துமீறி உள்ளே நுழைந்து பிடித்து சென்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பின், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், காவல் ஆணையர் சங்கரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து திருமுல்லைவாயல் போலீசார், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று காலை திருமுல்லைவாயல், சோழன் நகர், முத்துமாரி அம்மன் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி (30), உமா (37) மற்றும் தேவி (50) ஆகியோரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post லாரி கவிழ்ந்து பால் கொட்டிய விவகாரம் தொழுவத்தில் அடைத்த மாடுகளை பிடித்துச்சென்ற 3 பெண்கள் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.