மதுரை அருகே புறம்போக்கு நிலத்தில் நடைபெறும் கோவில் கட்டுமானப் பணிக்குத் ஐகோர்ட் கிளை தடை..!!

மதுரை: மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் நடைபெறும் கோவில் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமானம் குறித்த எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கட்டுமான பணிக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில் மீண்டும் பணி தொடங்கியதற்கு யார் அனுமதி வழங்கியது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post மதுரை அருகே புறம்போக்கு நிலத்தில் நடைபெறும் கோவில் கட்டுமானப் பணிக்குத் ஐகோர்ட் கிளை தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: