பந்தலூர் அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: மளிகை கடையை சூறையாடியது

பந்தலூர்: பந்தலூர் அருகே ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. மளிகைக்கடையை சூறையாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், சேரம்பாடி அருகே புஞ்சக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் முன்பக்க ஜன்னலை உடைத்து சேதம் ஏற்படுத்தியது. அருகே இருந்த மளிகைக்கடை ஒன்றில் இருந்த அரிசி மூட்டை மற்றும் காய்கறிகளை வெளியே இழுத்து தின்றதோடு, காலில் போட்டு மிதித்து சேதம் செய்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தமிட்டு யானையை துரத்தினர்.

ஆனாலும் யானை சிறிது நேரம் அப்பகுதியிலேயே நின்றது. பின்னர் சிறிது நேரம் கழித்து அருகே இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. யானை நடமாட்டம் குறித்து இப்பகுதியில் உள்ள கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பந்தலூர் அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: மளிகை கடையை சூறையாடியது appeared first on Dinakaran.

Related Stories: