கள்ளிக்குடியில் மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

திருமங்கலம், செப். 8:கள்ளிக்குடி தூய இருதய மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைதி அரசியின் மறைமாநில தலைவர் அருள்தந்தை லாரன்ஸ், அருட்தந்தை பீட்டர்துரை கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் நாடகம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கள்ளிக்குடி எஸ்ஐ மணிமொழி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

The post கள்ளிக்குடியில் மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: