தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார். விருது பெறுவோருக்கு சான்றிதழ், ரூ.50,000 ரொக்கம், மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் விருதை பெற்றுக்கொண்டனர்.
The post தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கி கவுரவித்தார் appeared first on Dinakaran.