மதுரை திருப்பாலை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளை கொண்டாட்டம்

மதுரை, செப். 5: மதுரை திருப்பாலை புது நத்தம் சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ண பலராமர் கோயிலில் நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுட்டுள்ளது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கிருஷ்ண பலராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஆரத்தி மற்றும் கலை நிகழ்ச்சிகள், சங்கீர்த்ர்த்னம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படவுள்ளது. முன்பதிவு செய்யும் குழந்தைகளுக்கு மட்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து  கிருஷ்ண பலராமர் ஆசி பெறுமாறு திருப்பாலை இஸ்கான் கோயில் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.

The post மதுரை திருப்பாலை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: