தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சி.பி.எஸ்.சி/ ஐ.சி.எஸ்.இ உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/ முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
The post தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கு பள்ளி மாணவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.