காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உடனடி சேர்க்கை முதல்வர் தகவல்

காரைக்கால்,செப்.4: ‘‘காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உடனடி சேர்க்கை நடைபெறுகிறது,’’ என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் உள்ள புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டுக்கான டிப்ளமோ முதலாம் ஆண்டு (எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள்) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2 மற்றும் ஐடிஐ முடித்தவர்கள்) உடனடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்லூரியில் சேர விரும்பும் புதுவை மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04368-265521, 266521 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உடனடி சேர்க்கை முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: