பாளையில் காமராஜர் நினைவு கல்வெட்டு திறப்பு

நெல்லை, செப்.4:பாளையங்கோட்டை புதுப்பேட்டை நாடார் தெருவில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு கல்வெட்டு திறப்பு விழா நடந்தது. பேராசிரியர் கே.சேவியர் அமல்ராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து காமராஜரின் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியர் தாமஸ், பேராசிரியர் சவுந்திரராஜன், அந்தோணி சாமி, முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். ஊர்த்தலைவர் சேர்மக்கனி, பொறுப்பாளர்கள் சிவபெருமாள், செல்வம் செந்தில்முத்து, பலவேசமுத்து, ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை தொழிலதிபர் செந்தில்குமார் செய்திருந்தார்.

The post பாளையில் காமராஜர் நினைவு கல்வெட்டு திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: