கொடைக்கானலில்தூய ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல், செப். 3: கொடைக்கானலில் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடைக்கானல் உக்கார்த்தே நகர் பகுதியில் அமைந்துள்ளது தூய ஆரோக்கிய அன்னை ஆலயம். இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னையின் திருஉருவம் பொறித்த கொடி குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆலயத்தை வந்து அடைந்தவுடன் நற்கருணை ஆசீருடன் சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்த சிறப்பு திருப்பலிக்கு மதுரை பேராயர் இல்ல செயலக முதல்வர் அருட்தந்தை அலெக்ஸ் ஞானராஜ் தலைமை தாங்கினார். உக்கார்த்தே நகர் பங்குத்தந்தை பாப்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு திருப்பலி நிறைவடைந்தவுடன் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்று விழா மற்றும் கொடிபவனில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5.30க்கு நவநாள் திருப்பலி நடைபெறுகிறது.

The post கொடைக்கானலில்தூய ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: