சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

பேரையூர், செப். 2: பேரையூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை கர்நாடகாவில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பேரையூர் போலீசார் சிறுமியின் தாய் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புள்ள சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கி குழந்தை பெற காரணமாக இருந்த பூ கட்டும் தொழில் செய்து வரும் முத்துப்பாண்டி (29) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான முத்துப்பாண்டிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: