ஒட்டன்சத்திரம் ஆட்டு சந்தையில் திடீர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், செப். 1: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு கே.கே.நகரில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டு சந்தையை நேற்று நகர் மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆடுகளின் வருகை, வாகனங்களின் எண்ணிக்கை, சுங்கவரி வசூல் பணி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் யூசுப் காசிப் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் ஆட்டு சந்தையில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: