கல்வி இணை, மன்ற செயல்பாடு நிகழ்ச்சி

 

பழநி, செப். 1: பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் மன்ற செயல்பாடுகள் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். இதில் 6 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி- வினா, வானவில் மன்றம், அறிவியல் மன்றம், சிறார் திரைப்பட போட்டிகள் நடந்தது. கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

The post கல்வி இணை, மன்ற செயல்பாடு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: