இந்த போராட்டம் ஒருபுறம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே, மற்றொரு புறம் மாண்டியா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் கைகளில் நெருப்பு பந்தங்களுடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை நிறுத்தி விட்டு கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த இன்று டெல்லி செல்வதாக கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்பாசனத்துறை அமைச்சரான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு! கர்நாடகாவில் விடிய விடிய விவசாயிகள் போராட்டம்.. டெல்லி செல்லும் சிவக்குமார் appeared first on Dinakaran.