சமூக நல்லிணக்க கூட்டம்

காளையார்கோவில், ஆக.24: சிவகங்கை மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காளையார்கோவில் ஹோலிஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலசிங்கம், புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், பள்ளியின் முதல்வர் கிரேஸி சைமன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சமூக ஒற்றுமை மற்றும் சாலைபாதுகாப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார். காவல் சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

The post சமூக நல்லிணக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: