தந்தை பெரியார் விருது பெற செப்.15ம் தேதி கடைசி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அழைப்பு

நாகப்பட்டினம், ஆக. 20: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் மட்டும் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். தமிழ்நாடு முதல்வரால் விருது பெறுவோர் தேர்வு செய்யப்படுகிறார். நடப்பு ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரை செய்யப்படவுள்ளனர். எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழுமுகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் (ம) ஆவணங்கள் ஆகியவற்றுடன் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post தந்தை பெரியார் விருது பெற செப்.15ம் தேதி கடைசி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: