பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சிறுபான்மையினர் கடன் பெற நடைமுறை தளர்வு: கலெக்டர் தகவல்

தஞ்சாவூர், ஆக.18: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன் , சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான விராசத் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, விகிதம், ஆகியவற்றில் கீழ்கண்டவாறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி வட்டி பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கைவினை கலைஞர்களுக்கான விராசாத் கடன் திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கைவினை கலைஞர்களுக்கு (விராசத் கடன்) திட்டம் 1ன் கீழ் ஆண்களுக்கு 5சதவீத, பெண்களுக்கு 4சதவீத வட்டி விகிதத்தில் அதகி பட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 6சதவீத, பெண்களுக்கு 5சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம், மேலும், தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி அல்லது தொலைபேசி எண். 04362-278416 மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சிறுபான்மையினர் கடன் பெற நடைமுறை தளர்வு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: