வாலிபர் தற்கொலை

 

தொண்டி, ஆக.14: தொண்டி அருகே காதலித்து திருமணம் செய்த கணவன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தொண்டி அருகே தளிர் மருங்கூரை சேர்ந்த ஜெயசந்திரன்(23), காவியா(20). இருவரும் காதலித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. ஜெயசந்திரன் தேவகோட்டையில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தளிர் மருங்கூர் வந்த ஜெயசந்திரன் குடும்பத்தினருடன் பேசிவிட்டு வீட்டின் உள்ளே சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: