உலகம்பட்டியில் மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்

சிங்கம்புணரி, ஆக.13: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி குமாரமுடைய அய்யனார் ஆடி பழச் சிறப்பு விழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு உலகம்பட்டி ஊராட்சியில் உள்ள உபய கண்மாய் பகுதியில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக உலகம்பட்டி புதுவாடி, படமிஞ்சி, ஆரணிப்பட்டி, கண்டியாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு கிராம மக்கள் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து காளைகளுக்கு வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். தொழுவில் இருந்து கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளி பகுதிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகளை இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதில் பல காளைகள் பிடிபடாமல் போக்கு காட்டி ஓடியது. மாடுகளை பிடிக்க முயன்றதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post உலகம்பட்டியில் மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: