காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர், தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார். அங்கு அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து பேசினார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார். எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது. இந்த வாரம் சோனியா முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.

The post காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி appeared first on Dinakaran.

Related Stories: